காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுத் தேர்வு முன்னேற்பாடு ஆயத்த கூட்டம்

காஞ்சிபுரம், பிப்.20:  பொது தேர்வுகளுக்கான முன்னேற்பாடு ஆயத்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில், பொதுத் தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆயத்த கூட்டம் நடந்தது.இதில், தேர்வு மையத்துக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வருவதற்கான போக்குவரத்து வசதி, தேர்வு மையங்களுக்கு தேர்வு நாட்களில் பாதுகாப்பு வசதி, தேர்வர்களுக்கான அடிப்படை வசதி செய்வது, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு முழுநேர ஆயுதம் தாங்கிய காவலர்களை கொண்டு பாதுகாப்பு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் காஞ்சி சத்தியமூர்த்தி, செங்கை ஆஞ்சலோ இருதயசாமி, டிஎஸ்பி கலைச்செல்வன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, ராதாகிருஷ்ணன், தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: