விருத்தாசலம், பிப். 19: பெண்ணாடம் அருகே உள்ள தி.அகரம் கிராமத்தில் வீரனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியை சேர்ந்த நடேசன்(65) என்பவர் பூசாரியாக இருந்து கோயிலை கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு இரவு கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை கோயிலை திறப்பதற்கு வழக்கம் போல் வந்தபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் தெரிவித்துவிட்டு அவர்களோடு கோயிலுக்குள் சென்று பார்த்தபோது,