சாத்தூர், பிப்.18: சாத்தூர் அருகே ரூக்குமுஞ்சி கிராமத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் தீப்பற்றி வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து அம்மாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே ரூக்குமுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60). இவர் ஒய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது வீட்டில் நேற்று மதியம் மின்சாரம் தடைபட்டதாகவும், பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தபோது உயர்மின் அழுத்தும் ஏற்பட்டு, வீட்டில் உள்ள டியூப்லைட், மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, தொலைகாட்சி உள்ளிட்ட பொருள்கள் பலத்த சத்ததுடன் வெடித்து சிதறி சேதமடைந்துள்ளது.