ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

கெங்கவல்லி, பிப்.19: கெங்கவல்லி அருகே ஏரியில் மிதந்த முதியவர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கெங்கவல்லி அருகே உள்ள ஏரியில் நேற்று காலை ஒரு ஆண் சடலம் மிதந்துள்ளது. இதுகுறித்து அவ்வழியாக சென்ற மக்கள், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் கெங்கவல்லி புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(70) என்பது தெரிய வந்தது. இவர், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார். மாலை நேரத்தில் பார்வை குறைபாடு காரணமாக அவதிக்குள்ளாகி வந்த ஆறுமுகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்ேறு கோணங்களில் கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: