ராசிபுரத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டி

ராசிபுரம், பிப்.19: ராசிபுரத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

ராசிபுரம் வித்யாமந்திர் பள்ளியில் ஆஸ்ரம் யோகா பயிற்சி மையததின் சார்பில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கான மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் வயது மற்றும் உடல் எடை அடிப்படையில் நடந்த யோகாசனத்தில் 650 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டார்கள். யோகாசனத்தில் முன்வளைதல், பின்வளைதல், சமநிலைப்படுத்தல் போன்ற பிரிவில் போட்டிகள் நடத்த பட்டது. போட்டியை எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி செயலாளர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். வித்தியா மந்திர் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகத்தார். கிருஷ்ணன் வரவேற்றார். இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் ராஜகுமாரி தலைமையிலான மாணவ -மாணவிகள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் தனலட்சுமி தலைமையிலான குழுவினர் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பயிற்சியாளர்கள் சரவணன், தனலட்சுமி, ராஜகுமாரி, கோகிலா, சாந்தி, பிரபு, கிருஷ்ணன், தாமரைசெல்வன், வெங்கடாசலம், மாணிக்கம், பத்மநாபள் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர். முடிவில் ஆஸ்ரம யோகா மையத்தின் பயிற்ச்சியாளர் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories: