மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சி, பிப்.19: மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.எரிவாயு நுகர்வோர்களுக்கான சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு டிஆர்ஓ சாந்தி தலைமையில் மண்ணச்சநல்லூர் தாலுகா அவலகத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன காஸ் முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் காஸ் வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொள்ளும் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் வட்டத்துக்குட்பட்ட காஸ் நுகர்வோர் மறுநிரப்பு பதிவு செய்து பெறுவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் காஸ் முகவர்களின் தாமதப்போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர்பான புகார்கள் மனுக்கள் மூலமாக பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறைதீர் கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் தாலுகாவுக்குட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு காஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பான குறைபாடுகளை மனுக்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: