அறந்தாங்கி, பிப்.19:அறந்தாங்கி அருகே சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில் 6 ஆடுகள் பலியானது.7 பேர் படுகாயமடைந்தனர்.ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. ஆட்டு வியாபாரியான அவர் சரக்கு வாகனத்தில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கியில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் மருங்காபுரியைச் சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் வந்தனர். சரக்கு வாகனத்தை பழனிச்சாமி ஓட்டினார்.அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை பகுதியில் வந்தபோது, மீமிசலில் இருந்து விராலிமலைக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் சென்ற மற்றொரு சரக்கு வாகனம் மோதியது.