நாகர்கோவில், பிப்.19: குமரி மாவட்டத்தில் சாலை விதிகளை மதித்து எத்தனை பேர் வாகனங்கள் ஓட்டுகிறார்கள் என்பதை கண்டறிய, நேற்று ஒரே நாளில் 100 இடங்களில் போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.
தமிழகத்தில் பைக்கில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறியதாக தினந்தோறும் 800 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யபப்படுகின்றன. சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்ைக 1000க்கு மேல் என பதிவாகி வருகிறது. ஒரு சில நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனாலும் விபத்துக்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. கடந்த 2019 ல் மட்டும், 211 பேர் பலியாகி உள்ளனர். இதில் பைக் விபத்துகள் தான் அதிகம். குடிபோதை, அதி வேகம், ரேஸ் மூலம் விபத்துகள் நடந்துள்ளன. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறது, பொதுமக்கள் மத்தியில் எந்தளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.