மாவட்ட கபடி போட்டி உறைகிணறு அணி சாம்பியன்

சாயல்குடி, பிப்.18: சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தில் மாவட்ட அளவிலான கிராமிய கபடி போட்டி நடந்தது. சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தில் கிராமிய கபடி போட்டி மாவட்ட அளவில் நடந்தது. போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் சேர்மன் ஜின்னா தலைமையும், நரிப்பையூர் பஞ்சாயத்து தலைவர் நாராயணன் முன்னிலையும் வகித்தனர். இரவு,பகலாக நடந்த கபடி போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி,மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 30 அணிகள் கலந்து கொண்டது. இறுதி போட்டியில் உறைகிணறு அணிகள் முதல் மற்றும் மூன்றாம் இடத்தையும், கரிசல்குளம் அணியினர் 2வது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பணமும், கோப்பைகள், கேடயங்களும் வழங்கப்பட்டது.

Related Stories: