டாஸ்மாக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு

திருவையாறு ஒன்றியம் கருப்பூர் ஊராட்சி தலைவர் மதுவிழி செந்தமிழ்ச்செல்வன் உட்பட கிராமத்தினர் அளித்த மனு: திருவையாறு தாலுகா கருப்பூர் ஊராட்சியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவர். மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு பெரும் இடையூறாக இக்கடை மாறும் அபாயம் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க வேண்டாம். கடையை திறக்க வேண்டாம் என அனைத்து மக்களும் கிராமசபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக அமையக்கூடிய டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: