பெரம்பலூர்,பிப்.18: பெரம்பலூரில் மலைபோல் குவிந்து கிடந்த மார்க்கெட் கழி வுகளை தினகரன் செய்தி எதிரொலி விரைந்து அகற்றப்பட்டது.
பெரம்பலூர் பழைய பஸ் டாண்டின் வடபுறத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. வளாகத்தில் உள்ள வாடகைக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், தரைக்கடைகளுடன் சேர்த்து அதிலுள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளின் காய் கறிக் கழிவுகள் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு மேற்குப் பகுதியில் உள்ள சின்ன நடைபாதையில் தான் கொட்டப்படுகிறது. வேப்பந்தட்டை தாலுகா வைச்சேர்ந்தவர்களும், ஆத்தூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு செல்வோரும் இந்த நடைபாதையைத்தான் பெரிதும் பயன் படுத்துகின்றனர். மிகச்சிறிய அளவில் காணப்படும் இந்த நடைபாதையை பெரி தும் ஆக்கிரமித்தபடி மார்க்கெட் குப்பைகள் மலைபோல் கொட்டப்படுகின்றன. இதில் 80 சதவீதக் குப்பைகள் காய்கறிக் கழிவுகளாக உள்ளதால் அவற்றை உண் ண வருகின்ற மாடுகள், கிண்டிக் கிளறி குப்பைகளைப் பரப்பிவைத்து விடு கின்றன. அதோடு நகராட்சி நிர்வாகம் குறித்த காலத்தில் அவற்றை அப்புறப்படு த்தாததால் காய்கறிக் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகின்றன. மேலும் அப்பகுதியில் பொதுமக்களுக்கான கட்டணமில்லா கழிப்பறை இல்லாததால் பாதசாரிகள் குப்பைகளின் மீதே சிறுநீர் கழித்துவிட்டுச் சென்று விடுகின்றனர்.