தேவகோட்டை, பிப்.17: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மாநில அளவிலான கவிதை பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி துணைத்தலைவர் சேவுகன் தலைமையேற்றார். கல்லூரி செயலார் சாந்தி ஆச்சி முன்னிலை வகித்தார். முனைவர் கண்ணதாசன் வரவேற்றார். காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் மரபுக்கவிதை குறித்து திரைப்பட பாடலாசிரியர் தனிக்கொடி, இரண்டாம் அமர்வில் கவிஞர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு கவிதைப்பயிற்சி அளித்தனர்.