திருவாடானை, பிப்.17: சி.கே.மங்கலத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ெதாங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே பள்ளி நேரத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு தொண்டி,திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் என பல்வேறு ஊர்களில் இருந்து கிராமப்புற மாணவர்கள் பஸ்ஸில் வந்து படித்து செல்கின்றனர். காலையில் பள்ளிக்கு வரும்போது பஸ்சில் அதிக அளவு கூட்டம் இருப்பதில்லை.