வாடிப்பட்டி, பிப். 17: சமயநல்லூர் துணை கண்கானிப்பாளர் அலுவலகம் சார்பில் சமயநல்லூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் முகாமில் 102 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது மதுரை மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் ஆலோசனையின் பேரில் காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. இம்முகாம் சமயநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமயநல்லூர் டி.எஸ்.பி ஆரோக்கிய ஆனந்த்ராஜ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியாபாய் முன்னிலை வகித்தார்.