வத்தலக்குண்டு, பிப். 17: வத்தலக்குண்டுவில் தமுமுகவினர் சென்னை தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வத்தலக்குண்டுவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக நகர தலைவர் இம்தியாஸ் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலாவுதீன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் திருச்சி ஜாபர் அலி, மாவட்ட பொறுப்பாளர் முகமது ரிஜால், முன்னாள் மாவட்ட துண அமைப்பாளர் கனவா பீர் ஆகியோர் பேசினர்.