குமாரபாளையம், பிப்.13:தேமுதிகவின் கொடிநாள் விழாவை முன்னிட்டு, குமாரபாளையம் நகராட்சி பகுதியில் 7 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் சிவசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அவைத்தலைவர் மணியண்ணன், பொருளாளர் செல்வகுமார், துணை செயலாளர்கள் ராஜ், மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி மோகன் மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.