கமுதி, பிப்.13: கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் கமுதியில் நேற்று பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருள் ஒழிப்பு பணியை தீவிரமாக நடத்தினர். 3 குழுக்களாக பிரிந்து பேருந்து நிலைய பகுதி, நாடார் பஜார், செட்டியார் பஜார், முஸ்லீம் பஜார் பகுதிகளில் அதிரடியாக கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள், கேரி பைகளை பறிமுதல் செய்தனர்.