தங்கப்பதக்கம் வென்ற இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

மதுரை, பிப். 13: பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இன்ஸ்பெக்டரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பூப்பந்து போட்டி கடந்த 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக, மதுரை நகர் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமாமாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். இவரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

Related Stories: