பெற்றோருக்கு பாத பூஜை

மதுரை, பிப்.12: மதுரை கோவில்பாப்பாகுடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றனர்.

பொதுத்தேர்வை நலத்துடனும், பெற்றோர் ஆசியுடனும் எழுதும் வகையில் இந்த பாதபூஜை நடத்தப்பட்டது. அதிகாலையில் ஹோமம் வளர்க்கப்பட்டது. பள்ளித் தலைவர் வடிவேலு, முதல்வர் விஜயலட்சுமி, துணை முதல்வர் ஹேமா, கூடுதல் துணை முதல்வர் ராமலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் 126 மாணவர்கள் அவர்களது பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர். சில மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் பாதபூஜை செய்தனர். பெற்றோர் தங்களுக்குள் மாலை மாற்றிக் கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு தேர்வை நல்ல முறையில் எழுத, பள்ளி சார்பில் பேனா பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் பரிமாறப்பட்டது.

Related Stories: