மணப்பாறையில் பரபரப்பு நிதியுதவி ரூ.5.27 லட்சத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கல் மீதி 27 ஆயிரம் எங்கே? ராணுவ வீரர் கேள்வி

திருச்சி, பிப்.12: ராணுவ வீரர்கள் 37 பேருக்கு நிதியுதவி ரூ.5 லட்சத்து 27 ஆயிரம் என்று அறிவித்துவிட்டு, ரூ.5 லட்சம் மட்டும் வழங்கப்பட்டது. மீதி ரூ.27 ஆயிரம் எங்கே என்று ராணுவ வீரர் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் கடந்த 5ம் தேதி நடந்த கூட்டத்தில் 37 பேருக்கு நிதி உதவி வழங்குவதற்காக மாஜி படை வீரர்களின் சிறப்பு குறைதீர் கூட்டம் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் 37 பேருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியாக வழங்கப்பட்டது. இதில் ரூ.5,27,000 என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மீதி ரூ.27 ஆயிரம் விவரத்தை தெரிவிக்கவில்லை. இது குறித்து திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் பதில் அளிக்க வேண்டும் என ராணுவ வீரர் கந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: