நீடாமங்கலம், பிப். 12: நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் வடக்கு அண்ணாதுரை, தெற்கு மாயவநாதன், நகர செயலாளர் ராஜசேகரன், ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி தேசபந்து, மாவட்ட மகளிரணி ராணிசேகர், மாவட்ட தொண்டரணி சுந்தர், ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.