கும்பகோணம்,பிப்.12: கும்பகோணத்தை அடுத்த சுந்தரபெருமாள்கோவில் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சாவித்திரி (53). அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரசேகர்(65). சாவித்திரிக்கும், சந்திரசேகருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் அவரது மகன் சந்தோஷ் மற்றும் உறவினர் விஜய் ஆகிய மூவரும் சேர்ந்து சாவித்திரியை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சாவித்திரி சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து சாவித்திரியின் உறவினர்கள் ஆனந்த் மற்றும் மகேஷ் இருவரும் சேர்ந்து சுப்பிரமணியன் மகன் சந்திரசேகரை (65) தாக்கினர்.