பொன்.வையாபுரிப்பட்டி, தீத்தான்பட்டியில் சிறப்பு மாட்டு பொங்கல் விழா

பொன்னமராவதி, பிப். 11: பொன்னமராவதி அருகே பொன்.வையாபுரிப்பட்டி, தீத்தான்பட்டி ஆகிய இடங்களில் சிறப்பு மாட்டு பொங்கல் விழா நடந்தது.

பொன்.வையாபுரிப்பட்டியில் இருந்து பொங்கல் கூடைகள் சுமந்து ஊர்வலமாக சென்று வலையபட்டி மலையாண்டி கோயில் முன்பு பொங்கல் வைத்தும், மாடுகளுக்கு துண்டுகள் வழங்கியும் பொங்கல் விழா கொண்டாடினர். இதேபோல் தூத்தூர் ஊராட்சி தீத்தான்பட்டி கோயில் வீட்டில் இருந்து பொங்கல் கூடைகள் எடுத்து சென்று தூத்துக்கண்மாய் பொங்கல் தளத்தில் பொங்கல் வைத்து சுவாமியாடி வழிபாடு நடத்தினர்.

Related Stories: