சுசீந்திரம், பிப்.12: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்னவேல் பாண்டியன், முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், ஆய்வாளர் சாரதா, கண்காணிப்பாளர் தங்கம், கோயில் மேலாளர் சண்முகம் பிள்ளை ஆகியோர் முன்னிலையில் 11 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.