குன்னூர் மேட்டுப்பாளையம் பாதையில் காட்டு யானைகள் முகாம்

குன்னூர், பிப்.12: குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை பாதையில்  காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.  குன்னூர்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகின்றன. இந்நிலையில் உணவைத் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு, குட்டியுடன் 7 யானைகள் வந்து முகாமிட்டு உள்ளன. அவ்வப்போது காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சாலையை கடந்து செல்கிறது. தற்போது கேஎன்ஆர் அருகே இரு குழுக்களாக யானைகள் பிரிந்து சாலையோர வனப்பகுதியில்  உள்ளன. இந்த  யானைகள் சாலைக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .மேலும் அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். சாலைக்கு வரும் யானைகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: