தொண்டி, பிப்.11: தொண்டி பகுதி பெண்களின் கல்வி திறன் உயர தொண்டியில் மகளிர் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் தொண்டியை சார்ந்தே உள்ளது. இப்பகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழீல் உள்ளது. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரே அதிகமாக உள்ளனர். இங்கு பிளஸ் 2 வரையிலும் இருப்பதால் பெரும்பாலும் பெண்கள் பள்ளி படிப்பை முடித்து விடுகின்றனர். மேலும் அடுத்த கட்டமாக கல்லூரி படிப்பிற்கு ராமநாதபுரம், காரைக்குடி என செல்ல வசதியில்லாமல் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். இது பெண்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ளது. அதனால் தொண்டியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துன்னனர்.