சேலத்தில் 2 வாலிபர்களிடம் நகை பறிப்பு

சேலம், பிப்.7: சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் பொன்னம்மாபேட்டை கேட் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த வடக்கு ரயில்வே கேட்டை சேர்ந்த மோகன்ராஜ் (24), அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 11 வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், சேலம் அழகாபுரம் தண்ணீர்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி (27). இவர் ஸ்வர்ணபுரி ஜங்சன் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த மர்மஆசாமி, அவரிடமிருந்து ஒரு பவுன் நகையை பறித்து சென்றான். இதுகுறித்து பூபதி பேர்லாண்ட்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார், தாதகாப்பட்டியை சேர்ந்த சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: