சென்னை, பிப். 7: சென்னை கொளத்தூர் வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் முனியன் என்ற முனியப்பன் (29). இவர், வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் தொழில் செய்து வந்தார். மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தினசரி பால் பாக்கெட் போடும்போது அந்த வீட்டில் உள்ள ஒரு பெண்ணை முனியப்பன் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனால் ஒவ்வொரு முறையும் பால் பாக்கெட் போடும்போது, அந்த பெண்ணிடம் வித்தியாசமாக சைகை காட்டுவது, சிரிப்பது போன்ற செயலில் முனியப்பன் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வரும் 27ம் தேதி, திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இதுபற்றி அறிந்த முனியப்பன் நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், அந்த பெண்ணின் பெற்றோரிடம், ‘‘உங்கள் மகளை நான் காதலிக்கிறேன்.