ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை கோதண்டராமசாமி கோயிலில் சமபந்தி விருந்து

அரியலூர், பிப்.4: அரியலூரில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அரசு தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் செந்தமிழ்செல்வி (அரியலூர்), மகாலெட்சுமி (தா.பழூர்), மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அன்பழகன் (அரியலூர்), ராஜேந்திரன் (தா.பழூர்), திருமானூர் ஒன்றிய துணைத் தலைவர் அம்பிகா, ஆவின் துணைத் தலைவர் தங்க.பிச்சமுத்து, கோயில் நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: