இடைப்பாடி, பிப்.4: இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் ரைஸ்மில் உரிமையாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் நெல் மற்றும் வைக்கோலை கொள்முதல் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் காவிரிக்கரை மற்றும் கால்வாய் பாசன பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், தெற்கத்திக்காடு, காட்டுவளவு, மூலப்பாறை, ஓனாப்பாறை, காசிநாடு, நாவிதன்குட்டை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, பூமணியூர், கல்வடங்கம், காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், வெள்ளாளபாளையம், தேவூர், அரசிராமணி பேரூராட்சி குளம்பட்டி, மூலப்பாதை, மலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.