நாமக்கல், ஜன. 31:நாமக்கல் வேளாண் கூட்டுறவு சங்க குடோனில் வைத்திருந்த 20 பருத்தி மூட்டைகள் மாயமானதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் பங்கேற்க பல ஊர்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகள் சங்கத்தில் உள்ள சேமிப்பு அறையில் வைக்கப்படும், அதில் 10 மூட்டைகளை நேற்று காணவில்லை.