சேலம், ஜன.30: சேலத்தில் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்தியது தொடர்பாக 15 பேர் கைது செய்த போலீசார் 35 இளம்பெண்களை மீட்டனர். சேலம் அத்வைத ஆசிரம ரோட்டில் அழகுநிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அழகுநிலையத்தில் வெளிமாநில பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் சேலம் மாநகரத்தில் பேர்லண்ட்ஸ், பள்ளப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர், அழகு நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மசாஜ் சென்டர், அழகு நிலையங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த 15 உரிமையாளர்கள், மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 35 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.