ஊட்டி, ஜன. 30: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் இரண்டு மாதங்கள் வட கிழக்கு பருவமழை பெய்யும். இவ்விரு பருவ மழையும் குறித்த சமயத்தில் பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகள், அதாவது செங்குத்தான மலைகளை கூட படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்வது வழக்கம். சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், கடந்த ஆண்டு குறித்த சமயத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால், பல ஆண்டுகளாக விவசாயம் ெசய்யாத செங்குத்தா மலைகளில் கூட விவசாயிகள் மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொண்டனர்.