வலங்கைமான்,ஜன29: வலங்கைமான் அடுத்த வடக்குபட்டம் ஊராட்சிக்கு தனி அங்காடி கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியும் தீர்வு காணப்படாத நிலையில் நாளை வலங்கைமான் கடைவீதியில் சாலைமறியல் செய்யப்போவதாக வடக்குபட்டம் கிராமவாசிகள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த வடக்குப்பட்டம் ஊராட்சியில் 245 குடும்ப அடைடைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அரிசி உள்ளிட்ட குடிமைப்பொருட்களை வடக்குபட்டம் அடுத்த தெற்குபட்டம் ஊராட்சியில் உள்ள அங்காடியில் பெற்று வருகின்றனர். வடக்குபட்டம் ஊராட்சிக்கென தனியாக முழுநேர அங்காடியோ அல்லது பகுதிநேர அங்காடியோ அமைத்து தர வேண்டும் என பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
வடக்குபட்டம் ஊராட்சிக்கென தனியாக அங்காடி அமைத்து தராவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்திருந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உரிய தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் அளித்த உறுதிமொழியின் பேரில் தேர்தல் புறக்கணிப்பு கைவிடப்பட்டது.