புதுக்கோட்டை, ஜன.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன் வாடி மையங்களை புதிய தொழில்நுட்பத்தால் நவீனப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இங்கு 5 வயதுக்குறைவான குழந்கைதள் வந்து செல்வார்கள். அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். இந்த அங்கன்வாடியில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு சமையலர் பணியில் இருப்பார்கள். அங்கன்வாடி மேற்பார்வையாளர் அந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுப்பது அவர்கள் குறித்த தகல்களை பதிவு செய்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் போதிய வசதிகள் இல்லாததால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், ஏபிசிடி, அஆ உள்ளிட்ட ஆரம்ப கல்வி சொல்லி கொடுபத்தற்கு தேவையான உபகணங்கள் இல்லாத நிலையில் உள்ளது.