சிவகங்கை, ஜன.28: சர்வதேச தரச்சான்றிதழ்கள் மானியம் மூலம் பெற விழிப்புணர்வு கூட்டம் சிவகங்கையில் நாளை(ஜன.29) நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டித்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் ஐஎஸ்ஓ 9001/ ஐஎஸ்ஓ 14001உள்ளிட்ட சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு செலுத்தும் கட்டணத்தில் 100 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரை மானியமாக அளிக்கப்படும். இந்நிதியாண்டில்(2019-2020) இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.