கமுதி அருகே பள்ளி பங்கேற்பு பரிமாற்ற நிகழ்ச்சி

கமுதி, ஜன.28:  கமுதி அருகே காத்தனேந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி பங்கேற்பு பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் முத்துமுருகன் வரவேற்று பேசினார். பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கும் கற்றல், கற்பித்தல் செயல்பாடு, ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாடு மற்றும் இரண்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. களப்பயணமாக மாணவர்களை ஆத்துக்காடு விவசாய நிலங்களுக்கு அழைத்துச் சென்று, பல தரப்பட்ட விவசாயம் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. நாட்டுப்புற கலை நிகழ்ச்சியோடு இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Related Stories: