ஆணையர் அறிவிப்பு பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பாடாலூர், ஜன. 28: ஆலத்தூர் தாலுகாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பாடாலூரில் நடந்தது.

கருத்தாய்வு மைய தலைமை ஆசிரியர் நல்லுச்சாமி தலைமை வகித்தார். ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் சாந்தப்பன், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் ஆனந்தி சிறப்புரையாற்றினர். ஆசிரியர் பயிற்றுநர் வஹிதா பானு, இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயச்சித்ரா ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கருத்தாய்வு மையத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 60 உறுப்பினர்கள் பயிற்சி பெற்றனர்.

Related Stories: