ெஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களுக்கான பரிமாற்ற நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், ஜன.28: ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணகெதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வெண்மான்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மணகெதி பள்ளி தலைமை ஆசிரியை சிலப்புசெல்வி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடுதல், டாய்டாக் மூலம் ஆங்கிலத்தை கற்றல், எளிய அறிவியல் சோதனை செய்தல், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நர்சரிக்கு களப்பயணம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை பற்றி நிகழ்ச்சிகள நடத்தி காண்பிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: