கும்மிடிப்பூண்டி. ஜன. 28: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க செயல்படாமல் உள்ள சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் 500க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியை கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்புக்காவும் கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், கும்மிடிப்பூண்டி பஜாரில் 15 லட்சம் செலவில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இவற்றை பராமரித்து, கண்காணிப்பதற்காக போலீசாருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புறக்காவல் நிலையமும் கட்டப்பட்டது. இந்த புறக்காவல் நிலையத்தை முந்தைய திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பாளர் சாம்சன் திறந்து வைத்தார்.