புழல், ஜன. 28: சோழவரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சோழவரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் சோழவரம் பெரிய காலனி அரசு ஆதி திராவிடர் நலத்துறை துவக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் படிக்கும் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவர்களுக்கு உதவிகள் செய்யக்கோரி பள்ளி தலைமையாசிரியர்கள் உமா, சாந்தி ஆகியோர் சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் சுகவேணி முருகனை நேரில் சந்தித்து கோரிக்கை வழங்கினர். இதனையடுத்து மேற்கண்ட இரண்டு பள்ளிகளுக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு தட்டு, டம்ளர் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.