பள்ளிப்பட்டு, ஜன. 28: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூரில் செல்வ விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள புராதன சப்த கன்னியர் மற்றும் சிவன் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு சனிக்கிழமை முதல் மூன்று நாட்கள் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழவையொட்டி திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் மூன்றாம் நாளான நேற்று காலை மஹா பூர்ணாஹுதியை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பட்டு சிவன் கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.