பெரம்பலூர், ஜன.24: பெரம்பலூர் வட்டாரப் போ க்குவரத்து அலுவலகம் சார்பாக, 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் திருச்சி சென்னை தேசி ய நெடுஞ்சாலையில், பெர ம்பலூர்-சிறுவாச்சூர் இடை யே உள்ள தனலட்சுமி சீனி வாசன் மருத்துவக் கல்லூ ரி மருத்துவமனையில், பெ ரம்பலூர் மாவட்ட எல்லைக் குட்பட்ட பகுதிகளில் இரு ந்து இயக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிவாகன ஓட் டுனர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கும் காவல்துறை வாகன ஓட்டு நர்களுக்கும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தப்ப ட்டது. இந்த இலவச கண் சிகிச் சை மற்றும் பொது மருத்துவ முகாமிற்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் இயக்குனர் ராஜபூபதி தலைமை வகித்தார். நெடுஞ்சாலைப் போக்குவரத்து டிராபிக் இன்ஸ்பெக்டர் கோபிநாத், டவுன் ட்ராபிக் இன்ஸ்பெக்டர் சௌந்தர ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.