திருப்புத்தூர், ஜன.24: திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மகதெப்ப உற்சவம் விழா சிறப்பாக நடைபெறும். இந்த தெப்ப உற்சவத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அருகில் உள்ள பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதில் முக்கிய நிகழ்வாக கோயிலின் அருகே தி.வயிரவன்பட்டியில் உள்ள கோயில் குளமான ஜோசியர் தெப்பக்குளப் படிக்கட்டிலும், குளத்தை சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.