கடலூர், ஜன. 23: 31வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 20ம் தேதி துவங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணிகள், கண்காட்சிகள், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. . நேற்று கடலூர், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், அதேபோல் நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம் கிளை அலுவலகங்களிலும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.