மூணாறு, ஜன. 22: மூணாறில் ஜனவரி 1ம் தேதி முதல் பொருட்கள் விற்பனை செய்வது பொது இடங்களில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது பல ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், முக்கிய சாலைகளில் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுவது குறித்து புகார் எழுந்துள்ளது. ,அதிகாரிகளில் அலட்சிய போக்கை காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தென்னகத்து காஷ்மீர் மூணாறில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக கேரள அரசு நடைமுறை படுத்திய உத்தரவின் அடிப்படையில் மூணாறில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் தலைமையில் வியாபாரிகள், மூணாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கிராம நிர்வாக தலைவர் பஞ்சாயத்து செயலாளர் போன்றவர்கள் பங்கெடுத்த பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது குறித்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.இதில் முதல் கட்டமாக ஜனவரி 1-ம் தேதி முதல் 500 லீட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கூடுதல் அளவில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வைத்திருப்போர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும், முக்கிய சுற்றுலா தளங்களில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்ய பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.