மூணாறில் மழவில் இரும்பு பாலத்தை புனரமைக்க கோரிக்கை

 

மூணாறு,மே 17: கேரளா மாநிலம் மூணாறு நகரில் உள்ள மழவில் இரும்பு பாலத்தை உடனடியாக புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூணாறு நகரை மாட்டுப்பெட்டி சாலையுடன் இணைக்கும் வகையில் முத்திரபுழையாற்றின் குறுக்கே பழைய சர்ச்சில் பாலத்திற்கு இணையாக கட்டப்பட்டது மழவில் பாலம். கடந்த 2010ல் ரூ.43 லட்சம் செலவில் பாதசாரிகளுக்காக இந்த பாலம் கட்டப்பட்டது. தினந்தோறும் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தில் கடந்து செல்கின்றனர்.

முற்றிலும் இரும்பினால் அமைக்கப்பட்ட இந்த பாலம் பாலம் தற்போது துருப்பிடித்து பயணிகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பாலத்தின் தூண்கள் மற்றும் கைப்பிடிகள் போன்றவை துருப்பிடித்து காணப்படுகிறது. எந்த நேரமும் பாலம் இடிந்து ஆற்றில் விழும் நிலையில் உள்ள பாலம் சீரமைக்கப்படும் என்று ஊராட்சி அதிகாரிகள் ஆறு மாதத்திற்கு முன் அறிவித்தனர். இருப்பினும் இன்னமும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே இந்த பாலத்தை உடனடியாக புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மூணாறில் மழவில் இரும்பு பாலத்தை புனரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: