தொண்டி, ஜன.22: தொ ண்டி பொதுமக்கள் வா க்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை எடுக்க திருவாடானை தாலுகா அலுவலகம் சென்றால், பெரும்பாலான நேரங்கள் நெட் பிரச்னை காரணங்களால் திரும்பி வர வேண்டியுள்ளது. மக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை எடுக்க திருவாடானை தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது பெரும்பாலும் அங்கு நெட் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஒரு நாள் முழுவதும் காத்திருந்தும் பலன் இல்லாமல் போய் விடுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.