மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் 10 நாட்களாக மின்சாரம் இல்லை அவதியில் பொதுமக்கள்

கீழக்கரை, ஜன.22:  கீழக்கரை அருகே மின் கம்பம் சாய்ந்து கிடப்பதால் கடந்த 10 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆகவே புதிய மின்கம்பத்தை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கீழக்கரை அருகே உள்ள நெய்னார் அப்பா தர்ஹா அருகில் செல்லும் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதடைந்த மின்கம்பம் பாலமாக அடித்த காற்றில் சாய்ந்து விட்டது. இதனால் இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு இருளில் முழ்கியது. மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மாவட்ட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மின்கம்பம் சாய்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் எங்கள் வீட்டில் மின்

சாரம் இல்லாமல் கடும் சிரமமாக உள்ளது. ஆகவே மாவட்ட மின்வாரியம் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்றி சீரான மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: