ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கோரிக்கை தொடர்பாக மனு அளித்துள்ளார். அதில், அந்தியூர் அருகே சென்னம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியின் அருகே பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். இந்த மலைப்பகுதி பறவைகள், விலங்குகள், கால்நடைகள் மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. விவசாய நிலத்தை ஒட்டியும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்திலும் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.